வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

விநாயகரின் அறுபடை வீடுகள்!!!

விநாயகரின் அறுபடை வீடுகள்!!!

விநாயகரின் அறுபடை வீடுகள்!!!

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-
* முதல்படை வீடு :-திருவண்ணாமலை 
திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் `அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.
* இரண்டாம் படை வீடு :-விருத்தாசலம்
விருத்தாசலம் இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.
* மூன்றாவது படைவீடு :-திருக்கடவூர்
திருக்கடவூர் எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

* நான்காம்படை வீடு :-மதுரை 
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.
* ஐந்தாவது படை வீடு :-பிள்ளையார்பட்டி
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும். 
* ஆறாம்படை வீடு :-திருநாரையுர்
திருநாரையுரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.
ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானின் அற்புதத் தோற்றங்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.
விநாயகப் பெருமான் பல கோவில்களில் கருமை நிறத்தில் அருள்புரிந்தாலும், சில தலங்களில் வெண்மை, மஞ்சள், சிவப்பு, சந்தனம், பச்சை ஆகிய வண்ணங்களில் எழுந்தருளியுள்ளார்.
மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!
கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை.
உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள்.
ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம்.
தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப… அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும்.
வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்!
மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.
ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம்.
ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம்.
விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள்.
மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம்.
மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.

வெள்ளை விநாயகர்

கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார்.
இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால்தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால்  ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது.
இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி போட்டார்கள். இறுதியில் கிருதயுகத்தில் திருக்கயிலையிலும், திரேதாயுகத்தில் வைகுண்டத்திலும், துவாபரயுகத்தில் சத்யலோகத்திலும், கலியுகத்தில் பூலோகத்திலும் வழிபடுவதென தேவர்கள் முடிவெடுத்தார்கள். அதன்படி இந்த விநாயகர் தற்போது இங்கு அருள்புரிகிறார்.
கடல்நுரையாலான இவர் அளவில் சிறியவர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாற்றுவர். இவ்வாலய உற்சவ விநாயகப் பெருமான், வேணி- கமலை எனும் இரு சக்திகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ளார்.
வடநாட்டில் வெண்பளிங்குக் கல்லாலான விநாயகரை பல இடங்களில் தரிசிக்கலாம். தமிழகத்தில் வெள்ளை நிறத்தில் விநாயகரை தரிசிப்பது அரிது. ஆனால் தற்பொழுது வெள்ளைப் பளிங்குக் கல்லால் உருவாக்கப்பட்ட வெண்விநாயகர், மயிலாடுதுறை கூறைநாடு ஸ்ரீநவசக்தி சாரதாதேவி கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். கருங்கல்லாலான விநாயகரை அரசமரத்தடியிலும், பல கோவில்களிலும் தரிசிக்கலாம்.
சிவப்பு விநாயகர்
செந்நிறம் கொண்ட விநாயகரை திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் காணலாம். ஸ்ரீசம்பந்த விநாயகர் என்று பெயர்பெற்ற இவர், கஜமுகாசூரனைக் கொன்று அவனுடைய குருதியை உடலில் பூசிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவருக்கு அபிஷேகம் முடிந்ததும் செந்தூரக்கலவையைக் காப்பிடுவது வழக்கம். குங்குமத்தில் அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடக்கும்.

மஞ்சள் விநாயகர்
வேலூர் சேண்பாக்கத்தி லுள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் மஞ்சள் பிள்ளை யார் எழுந்தருளியுள்ளார். மஞ்ச ளில் பிடித்த லிங்கவடிவில் உள்ளார். கூரை இல்லாத திறந்தவெளிக் கோவில் இது. மேலும், நாகை- திருவாரூர் சாலையிலுள்ள மாஞ்சாடி கிராமத்தில், ஸ்ரீபாலசுப்பிரமணியரால் உருவாக்கப்பட்ட மஞ்சள் பொடி விநாயகரை தரிசிக்கலாம். மஞ்சளால் உருவான விநாயகரை “ஹரித்ரா கணபதி’ என்று போற்றுவர். ஹரித்ரம் என்றால் நம் தரித்திரத்தைப் போக்குபவர் என்று பொருள்.
தெய்வ காரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மஞ்சளை மங்கலப் பொருளாக வைக்கவேண்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. அந்தவகையில் மஞ்சள்தூளை கூம்பு வடிவத்தில் பிடித்து வைத்து விநாயகராக பாவித்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
மேலும், வெள்ளெருக்கம் வேரினைக் கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவார். இந்த வெள்ளெருக்கு விநாயகரை வழி பட்டால் பில்லி, சூன்யம், தீயசக்திகள் அண்டாது.

சந்தன விநாயகர்
கர்நாடக மாநிலம், பேலூரிலுள்ள நர்த்தன விநாயகரின் திருவுருவம் சந்தன மரத்தாலானது.
கும்பகோணத்திற்கு வடமேற்கில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்புறம்பியம் பகுதியில் ஸ்ரீசாட்சிநாதர் சிவாலயம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகர் வித்தியாசமானவர். சந்தன நிறம்கொண்டு திகழ்பவர்.
கிருதயுகத்தில் ஏற்பட்ட பிரளயத்தின்போது மக்களைக் காத்தவர். இவர் ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து, சப்த சாகரத்தின் (ஏழு கடல்) பெருக்கையும் ஒரு கிணற்றில் அடக்கினார். அப்போது வருண பகவான் தன் திருமேனியிலிருந்து சங்கு, நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்றவற்றால் விநாயகரை உருவாக்கி பிரதிஷ்டை செய்து, அவருக்கு “பிரளயம் காத்த விநாயகர்’ என்று பெயரிட்டு போற்றி வழிபட்டார்.
சந்தன நிறத்தில் காட்சியளிக்கும் இந்த விநாயகரின் திருமேனியில் நிறைய கிளிஞ்சல்கள் உள்ளதைக் காணலாம். இந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயக சதுர்த்தியன்று இரவு மட்டும் தேனாபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. தேனாபிஷேகத்தின்போது தேன் முழுமையாக விநாயகரின் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். அப்போது செம்பவளமேனியராய் காட்சிதருவார்.

பசுமை விநாயகர்
கிராமப்புறங்களில் பசுஞ்சாணத்தை கூம்பு வடிவில் பிடித்து, அதில் அறுகம்புல் செருகி வழிபடுவர். பெரும்பாலும் வயல்வெளிகளில் இவர் பிரசித்தம். பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்ட பின்பே நாற்று நடுவார்கள். அதேபோல் அறுவடை சமயத்திலும் வழிபடுவர்.
அறுவடையான நெற்கதிர்களை களத்துமேட்டில் அடித்து நெல்மணிகளை உதிர்த்தபின், அதிலுள்ள பதர்களைப் பிரிக்க முறத்தினால் தூற்றுவார்கள். அப்பொழுது இளங்காற்று வீசாவிட்டால் பதர்கள் பிரியாது. அதுபோன்ற சமயங்களில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் செருகி, ஒரு கூடை போட்டு மூடி, அதை கோணிப்பையால் போர்த்திவிடுவார்கள்.
பின்னர், “பிள்ளையாரே, இளங்காற்று வீசணும். இல்லைன்னா நீ மூச்சுமுட்ட கூடைக்குள்ள இருக்கவேண்டியதுதான்’ என்று சொல்வார்கள். அப்படிச் சொன்ன சில நிமிடங்களில் இளங்காற்று வீச ஆரம்பிக்கும். உடனே கூடையை அகற்றி பிள்ளையாரை வணங்கிவிட்டு பதர்பிரிக்கச் சென்று விடுவது வழக்கம். இது இன்றும் கிராமப்புறங்களில் கடைப் பிடிக்கப்படுகிறது.

நிறம் மாறும் விநாயகர்
குமரி மாவட்டம் பத்மநாப புரத்துக்கு அருகேயுள்ள கேரளபுரத்தில், அரசமரத்தடியில் சந்திரகாந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட விநாயகரை தரிசிக்கலாம். இவர் உத்தராயன காலத்தில் (தை முதல் ஆனி வரை) கறுப்பாகவும், தட்சிணாயன காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) வெண்ணிறத்திலும் காட்சியளிப்பார்.
இவர் வீற்றிருக்கும் அரசமரமும் நிறம் மாறுகிறது. விநாயகர் கறுப்பாக இருக்கும்போது ஒரு பக்க மரம் அடர்த்தியான பச்சையாகக் காட்சிதரும். மறுபக்கம் இலைகள் உதிரும். விநாயகர் வெள்ளை நிறத்தில் மாறும்போது மறுபக்கம் இளம் பச்சையாகக் காட்சிதரும்.
இம்மரத்தருகில் இருக்கும் கோவில் கிணற்று நீரும், விநாயகரின் நிறத்திற்கேற்றாற்போல் நிறம் மாறும். கேரளவர்மா என்ற மன்னன் ராமேஸ்வர அக்னிக்கடலில் நீராடும்போது கிடைத்த விநாயகர் என்பர். இவருக்கு அரசமரம் தவிர மேற்கூரையில்லை.உச்சிஷ்டகணபதி என்ற பெயர் கொண்ட விநாயகர் நான்கு கைகள் கொண்டு திகழ்வார்.
இவரது வண்ணம் சிவப்பு. மகாகணபதி ஆறு கைகளுடன் மஞ்சள் நிறத்துடன் காட்சிதருவார். இதேபோல் மஞ்சள் நிறம் கொண்ட ஊர்த்துவ கணபதிக்கு ஆறு கைகள் இருக்கும்; பிங்கலகணபதிக்கும் ஆறுகைகள். ஸ்ரீலட்சுமி கணபதி நான்கு அல்லது எட்டு கைகள் கொண்டவர். இவரது நிறம் வெள்ளை என்கிறது புராணம்.

யுக விநாயகர்

பொதுவாக, விநாயகரின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு யுகத்திலும் அவரது வாகனம் மாறியிருக்கிறது.
கிருதயுகம்:
கிருதயுகத்தில் விநாயகரின் வாகனம் சிம்மம்.
திரேதாயுகம்:
திரேதாயுகத்தில் விநாயகரின் வாகனமாக மயில் இருந்திருக்கிறது. கமலாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காக “மல்லாளர்’ என்ற திருநாமத்துடன் தோன்றிய விநாயகர், போருக்குமுன் யாகம் வளர்த்தார்.
அந்த யாக குண்டத்திலிருந்து மயிலை உருவாக்கி அதை வாகனமாகக்  கொண்டு அந்த அசுரனை அழித்தார். பிறகு, தாருகன் என்ற அசுரன் போருக்கு வந்தபோது, தன்னிடமிருந்த மயிலை முருகனுக்கு அளித்துவிட்டார்.
துவாபர யுகம்: 
துவாபர யுகத்தில் இவரது வாகனம் மூஷிகம். கிரௌஞ்சன் என்ற அரசன், சௌபரி என்ற முனிவரின் பத்தினிமீது மோகம் கொண்டான். அதனால் அந்த மன்னனை பெருச்சாளியாக மாற முனிவர் சபித்தார். பெருச்சாளியான மன்னன் அனைவரையும் பல வழிகளில் துன்புறுத்தவே, அவனை அடக்கி தன் வாகனமாக்கிக்கொண்டார் விநாயகர்.
கலியுகம்:
விநாயகர் வாகனங்கள் கலியுகத்தில் விநாயகரின் வாகனம் குதிரை என்கிறது விநாயக புராணம்.
சிம்மம், மயில், மூஷிகம், குதிரை மட்டுமின்றி, காளை (ரிஷபம்), யானை ஆகியவையும் விநாயகருக்கு வாகனங்களாக இருந்திருக்கின்றன. பெரும்பாலும் விநாயகர் கோவில்களில் மூஷிகம் வாகனமாய் இருப்பதைக் காணலாம்.
மற்ற வாகனங்கள் உள்ள திருத்தலங்கள்:
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலிலும்; சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலுக்குமுன் அமைந்திருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவிலிலும் சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் பஞ்சமுக விநாயகரை தரிசிக்கலாம்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் சுதை வடிவத்திலும், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலிலுள்ள சித்திரத்திலும், அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் கோவிலிலும் மயில்வாகனத்துடன் விநாயகர் காட்சிதருகிறார்.
கோவை குரூபதேசிக கவுண்டர் விநாயகர் கோவிலிலும், கடலூர் சென்னப்ப நாயக்கன்பாளையம் மலையாண்டவர்  விநாயகர் கோவிலிலும் குதிரை வாகனத்துடன் அருள்புரிகிறார். சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திலும், நெல்லை காந்திமதியம்மன் கோவிலிலும் விநாயகர் சந்நிதிக்கு முன் வாகனமாக காளை இருப்பதைக் காணலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வைத்தியநாத சுவாமி ஆலய வாசலில் அருள்புரியும் ஸ்ரீகல்யாண விநாயகரும், திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையிலுள்ள அரசாள் வார் விநாயகரும் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார்கள்.

விநாயகர்-21
விநாயகரை இருபத்தியொரு எண்ணிக் கையிலான பூஜைப் பொருட்களால் வழி படுதல் வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
மலர்கள் 21, இலைகள் 21, பழங்கள் 21, அறுகம்புல் 21, மோதகம் 21, அதிரசம் 21, அப்பம் 21.மனிதனுக்குள் இருக்கும் இந்திரியங்கள் 21.அவை: ஞானேந்திரியங்கள் 5; அதன் செயல்கள் 5; கர்மேந்திரியங்கள் 5; அதன் செயல்கள் 5; மனம் 1. ஆக இந்திரியங்கள் 21. இந்த 21 இந்திரியங்களிலும் நிறைந்து அருள்பாலிக்கும் ஓங்கார உருவம் படைத்தவர் விநாயகர் என்று ஞான நூல்கள் கூறுகின் றன.
21 பொருட்களை சமர்ப்பித்து வழிபட நமக்கு 21 அம்சங்களை அள்ளிக்கொடுப்பார் விநாயகர்.
தர்மம், பொருள், இன்பம், சௌபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வு, அழகு, வீரலட்சுமியின் அருள், விஜயலட்சுமியின் கடாட்சம், எல்லாரும் விரும்பும் தன்மை, குடும்பத்தில் ஒற்றுமை, மக்கட்செல்வம், நல்லறிவு, பதவி, நற்புகழ், துன்பம் வராமை, தீயதை அகற்றுதல், செல்வாக்கு, சாந்த
குணம், பிறர் நம்மீது பொறாமைப்படாமல் இருத்தல் ஆகிய 21 சிறப்புகளை நமக்கு அள்ளித்தரும் மாபெரும் வள்ளல் விநாயகப் பெருமான்!
விநாயகப் பெருமானுக்குரிய மூல மந்திரங்கள் பல உள்ளன. இருந்தாலும் கீழ்க்கண்ட பிள்ளையார் மந்திரம் நல்ல பலன் தருமென்பர்.
நமோ வ்ராத பதயே நமோ கணபதயே
நம, ப்ரமதே பதயே, நமஸ்தே அஸ்து                     லம்போதராய
ஏக தந்தாய விக்ன நாசினே
சிவ சுதாய வரதமூர்த்தயே நமோ நம:
விநாயகப் பெருமானுக்குரிய எல்லா மந்திரங்களையும் மேற்கண்ட மந்திரம் உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. இந்த “மாலா’ மந்திரத்தை தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று 48 நாட்கள் விநாயகர் சந்நிதிமுன் 21 முறை தியானித்து வழிபட்டால் நினைத்த நற்காரியங்கள் வெகுவிரைவில் சித்தியாகும் என்று விநாயகர் வழிபாட்டு நூல்கள் கூறுகின்றன.

               விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

No comments:

Post a Comment